"நடிக்க" மறுத்த பெண்கள் கொலையா? - தோண்டப்படுகிறது "செக்ஸ்" டாக்டரின் பண்ணை வீடு
சென்னை:
ப்ளூ பிலிமில் நடிக்க மறுத்த பெண்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்படும் போலீசார் டாக்டர்பிரகாஷின் பண்ணை வீட்டைத் தோண்டிப் பார்க்க முடிவு செய்துள்ளனர்.
நான் எந்த குற்றமும் செய்யவில்லை, சில பெரிய மனிதர்கள் என்னை பழி வாங்கி விட்டார்கள், அவர்களைப்பற்றிய அதிர்ச்சியான தகவல்களை வெளியிடுவேன் என்று இன்டர்நெட் மூலம் ஆபாசப் படங்களை வெளியிட்டுகைதான டாக்டர் பிரகாஷ் கூறியுள்ளார்.
டாக்டர் பிரகாஷை நேற்று (செவ்வாய்க்கிழமை) சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்த அழைத்துவந்த போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நான் எந்த குற்றமும் செய்யவில்லை. சில பெரிய மனிதர்கள் என்னிடம் சவால் விட்டு என்னை பழிவாங்கியுள்ளனர். நான் ஜாமீனில் வெளி வந்தவுடன் அவர்களைப் பற்றிய அதிர்ச்சியான உண்மைகளைசொல்லுவேன்.
நான் லண்டன், சுவிட்சர்லாந்து நாடுகளில் டாக்டர் படிப்பு படித்தவன். என்னை கைது செய்ததால் என் மனைவியும்கோபித்துக் கொண்டு போய்விட்டார்.
என் தம்பி அமெரிக்காவில் கிரடிட் கார்டு கம்பெனியில் வேலை செய்கிறார். இந்த விவகாரத்தில் அவருக்கு எந்ததொடர்பும் இல்லை.
எண்ணூ
பிறகு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட பிரகாஷை நீதிபதி இன்னும் 6 நாட்களுக்கு போலீசாரின் காவலில் வைத்துவிசாரிக்க உத்தரவிட்டார்.