15 ரூபாய்க்கு 100 மில்லி: மலிவு விலை மது அமோக விற்பனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கள்ளச் சாராயத்தை ஒழிப்பதற்காக தமிழக அரசு அறிமுகம் செய்த மலிவு விலை மது புத்தாண்டு தினம் (நேற்று)முதல் விற்பனைக்கு வந்தது.

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களில் நடந்த கள்ளச்சாராய சம்பவங்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.பண்ருட்டியில் மட்டும் 52 பேர் இறந்தனர்.

இதையடுத்து கள்ளச் சாராயத்தை முற்றிலுமாக ஒழிப்பதற்காக மலிவு விலை மதுவை விற்பனை செய்ய தமிழகஅரசு முடிவெடுத்தது.

ரூ.15க்கு 100 மில்லி லிட்டர் மதுவை விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. நேற்று முதல் இந்தமலிவு விலை மது விற்பனை அமலுக்கு வந்தது.

சென்னையில் உள்ள மதுக் கடைகளில் நேற்று மாலை முதல் மலிவு விலை மது விற்பனை தூள் பறந்தது.

"குடிமகன்"களின் கூட்டம் அலைமோதியது. ஒவ்வொருவரும் ஒரே நேரத்தில் 4 முதல் 5 பாட்டில்களை வாங்கிச்சென்றனர்.

விற்பனை ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே மலிவு விலை மது பாட்டில்கள் விற்றுத் தீர்ந்து விட்டன.

மது தயாரிப்பாளர்கள் அதிருப்தி?

முன்னதாக, அரசு அறிவித்துள்ள ரூ.15க்கு 100 மில்லி மதுவைத் தயாரிப்பதில் லாபமில்லை என்று மதுதயாரிப்பவர்கள் கூறியுள்ளதால், மலிவு விலை மது வருவது தாமதமாகும் என்று தகவல்கள் வெளியாகின.

ஏற்கெனவே மார்க்கெட்டில் ரூ.27க்கு 100 மில்லி மது விற்பனை செய்து வரும் வியாபாரிகள் எப்படி ரூ.15க்குவிற்க முடியும் என்று கேள்வி எழுப்பினர்?

ஒரு லிட்டர் மலிவு மதுவைத் தயாரிக்க ரூ.180லிருந்து ரூ.200 வரை ஆகிறது. ரூ.15க்கு 100 மில்லி சாராயம்விற்றால் ஒரு லிட்டருக்கு ரூ.80 வரை நஷ்டமாகும். இதெல்லாம் சரிப்படாது என்று தயாரிப்பாளர்கள் கூறி வந்தனர்.

ஆனாலும் ஒருவழியாக மலிவு விலை மது விற்பனைக்கு வந்து சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+