For Daily Alerts
Just In
கண்டெய்னர் பரிமாற்றம்: தூத்துக்குடி துறைமுகம் சாதனை
தூத்துக்குடி:
தூத்துக்குடி துறைமுகம் கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 333 கண்டெய்னர்களை ஏற்றி-இறக்கி சாதனைபடைத்துள்ளது.
இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 40 சதவிகிதம் அதிகமாகும். அப்போது (2000-01) 1,56,978கண்டெய்னர்களே ஏற்றி-இறக்கப்பட்டன.
ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள்தான் இந்தச் சாதனைக்குக் காரணம் என்று தூத்துக்குடி துறைமுக அதிகாரிகள்தெரிவித்தனர்.
மேலும் துறைமுக ஊழியர்களும் இந்தச் சாதனைக்கு முக்கியமான காரணம் என்று அந்த அதிகாரிகள் பாராட்டினர்.
இதற்கும் மேலாக கண்டெய்னர்களை அப்புறப்படுத்தும் பணியில் பி.எஸ்.கே. சிகால் டெர்மினல் லிமிடெட் என்றதனியார் கம்பெனி அதிவேகமாக செயல்பட்டாதற்காக அவர்களையும் துறைமுக அதிகாரிகள் பாராட்டினர்.
Comments
Story first published: Wednesday, January 2, 2002, 5:30 [IST]