தமிழகத்தில் பழுதான சாலைகள் விரைவில் சீராகும்... அமைச்சர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை நகர சாலைகள் உள்ளிட்ட மாநிலத்தில் உள்ளபல்வேறு சாலைகள் இந்த மாதத்திற்குள் சரி செய்யப்பட்டு விடும் என்று மாநில பொதுப்பணித்துறை அமைச்சர்தளவாய் சுந்தரம் கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெறும் சாலை சீரமைப்புப் பணிகளை பார்வையிட்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம்பேசுகையில்,
மழையினால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் சென்னையும் அடங்கும்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சாலைகள் சரியாக போடப்படாத காரணத்தால்தான் இந்த அளவுக்கு மோசமாகஅவை பழுதடைந்துள்ளன.
இந்த சாலைகள் அனைத்தும் இந்த மாத இறுதிக்குள் சரி செய்யப்பட்டு விடும். இந்தப் பணிக்காக ரூ.17 கோடிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை முதல் சோளிங்கர் வரையிலான கிழக்கு கடற்கரைச் சாலை 4 வழிப் பாதையாக மாற்றப்படவுள்ளதுஎன்றார் அமைச்சர்.












Click it and Unblock the Notifications