For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருச்சிக்கு கடத்தப்பட்ட பெங்களூர் பெண்கள் மீட்பு

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி பெங்களூரை சேர்ந்த 2 பெண்களை ஒரு வாலிபர் திருச்சிக்கு கடத்திசென்றார். ஆனால் திருச்சி பஸ் நிலையத்தில் அந்த பெண்களை போலீசார் மீட்டனர்.

பெங்களூர் விஜயா பாங்க் காலனியில் உள்ள ஜாகிருதீன் அனாதை ஆசிரமத்தை சேர்ந்த பெண்கள் நாகம்மாள்(17), மாலதி (17).

இவர்கள் ஆசிரம வாழ்க்கை பிடிக்காமல் அங்கிருந்து கடந்த 29ம் தேதி அதிகாலை வெளியேறி சென்னைக்குவேலை தேடி சென்றுள்ளனர். அங்கு ஒரு வாலிபர் இவர்களிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி திருச்சிக்குஅமைத்து வந்துள்ளான்.

திருச்சி பஸ் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் இருப்பதை பார்த்ததும் அவர்களை அங்கு விட்டுவிட்டுஅந்த வாலிபர் தலைமறைவாகி விட்டார்.

தனியே விடப்பட்ட அந்தப் பெண்களை போலீசார் கூப்பிட்டு விசாரித்துள்ளனர். அப்போதுதான் விவரம் தெரியவந்தது.

பிறகு அந்தப் பெண்கள் திருச்சி கண்டோன்மென்டில் உள்ள உதவும் கரங்கள் பெண் போலீசாரிடம்ஒப்படைக்கப்பட்டனர். அந்த பெண்போலீசார் பெங்களூர் அனாதை ஆசிரமத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

2 பெண்களையும் ஏமாற்றி திருச்சிக்கு அழைத்து சென்ற வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X