For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"இளைஞர்களிடம் தேசபக்தி வளர்ந்தால் இந்தியாவை அசைக்க முடியாது"

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இளைஞர்கள் ஒற்றுமையுடனும், தேச பக்தியுடனும் இருக்கும் வரை நம் நாட்டிலுள்ள ஒரு பிடி மண்ணைக் கூடதீவிரவாதிகளால் எடுத்துச் செல்ல முடியாது என்று மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறைஇணையமச்ைசர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் தேசிய இளைஞர் சைக்கிள் பேரணி கடந்த மாதம்28ம் தேதி கேரள மாநிலம் காலடியில் துவங்கியது. 35 இளைஞர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

இந்தப் பேரணி நேற்று (செவ்வாய்க்கிழமை) நாகர்கோவில் வந்தது. பேரணியில் வந்தவர்களை வரவேற்றுஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில்,

இளைஞர்களிடையே தேச பக்தி அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் நாட்டை அபகரிக்க நினைப்பவர்களுக்குஅது தோல்வியைத் தரும்.

இளைஞர்கள் ஒற்றுமையுடனும் தேசபக்தியுடனும் இருந்தால் தீவிரவாதிகளால் ஒரு பிடி மண்ணைக் கூட நம்நாட்டிலிருந்து எடுத்துச் செல்ல முடியாது.

அந்நிய சக்திகளிடமிருந்து நாட்டைக் காக்க அனைத்து தரப்பு மக்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும்என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.

இந்தப் பேரணி மதுரை வழியாக மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் செல்கிறது. வருகிற 17ம் தேதி டெல்லியைசென்றடைகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X