காணாமல் போன மாஜி அதிமுக எம்.எல்.ஏ. - நீதிமன்றத்தில் அரசு விளக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காணாமல் போய் விட்டதாக கூறப்படும் சென்னை மயிலாப்பூரில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே.பாலன்போலீஸ் காவலில் இல்லை என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
சைதாப்பேட்டை முன்னாள் திமுக எம்.எல்.ஏவான எம்.கே.பாலனைக் காணவில்லை என்று அவரது மகன்மணிமாறன் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனுவையும் அவர் தாக்கல் செய்துள்ளார். இந்தமனு நீதிபதிகள் சதாசிவம் மற்றும் ஞானப்பிரகாசம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது எம்.கே.பாலன், போலீஸ் காவலில் உள்ளாரா என்று அரசு வக்கீலிடம் நீதிபதிகள் கேட்டனர்.
அதற்கு அரசு வக்கீல், போலீஸ் காவலில் பாலன் இல்லை, அவரது உயிருக்கு போலீசாரால் எந்தவித ஆபத்தும்இல்லை. பாலனைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என்று அரசுத் தரப்பில் விளக்கமளித்தார்.












Click it and Unblock the Notifications