திமுகவுக்குப் போட்டியாக அரசு நடத்தும் கருத்தரங்கம்
சென்னை:
அறிவியல் தமிழ் மேம்பாடு குறித்த கருத்தரங்கம் சென்னையில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் வருகிறசனிக்கிழமை (ஜன.5) நடக்கவுள்ளது.
தமிழக கல்வி அமைச்சர் தம்பித்துரை இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இயல், இசை, நாடகம் என்ற அளவில் தமிழின் வளர்ச்சி நின்று விடக் கூடாது. நவீன தமிழ் வடிவமான அறிவியல்தமிழையும் மேம்படுத்த வேண்டியது நம் முன் உள்ள முக்கியப் பணியாகும்.
அறிவியல் தமிழ் மேம்பாடு குறித்த கருத்தரங்கம் சென்னையில் வருகிற சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்தகருத்தரங்கிற்கு முதல்வர் தலைமை தாங்கவுள்ளார்.
பல்துறை தமிழறிஞர்கள் இதில் கலந்து கொண்டு அந்தந்த துறைகள் குறித்து அறிக்கை வாசிக்கிறார்கள் என்றார்அவர்.
கண்ணகி சிலையை மீண்டும் மெரீனா கடற்கரையில் வைக்கக் கோரி திமுக தலைமையிலான கட்சிகள் மற்றும்அமைப்புகள் மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலை நாட்டும் போராட்டத்தை புதன்கிழமை நடத்தப் போவதாகஅறிவித்திருந்தன.
இதையடுத்து அதற்குப் போட்டியாக தமிழ் மேம்பாட்டுக் கருத்தரங்கம் அதே தேதியில் நடத்தப்படும் என்று தமிழகஅரசும் அறிவித்தது. இதைத் தொடர்ந்து திமுக தரப்பினர் தங்களது மாநாட்டை 5ம் தேதிக்கு தள்ளி வைத்தன.
இதையடுத்து தமிழக அரசும் தனது கருத்தரங்கை 5ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.