பெர்னாண்டஸ் அமெரிக்கா பயணம்
டெல்லி:
7 நாள் பயணமாக இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் வரும் 15ம் தேதி அமெரிக்காபுறப்படுகிறார். அவருடன் உயர் மட்ட பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் உடன் செல்கின்றனர்.
இந்தப் பயணத்தின்போது அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட், வெளியுறவுத்துறை அமைச்சர்காலின் பாவல், அமெரிக்க பாதுகாப்புத்துறை ஆலோசகர் காண்டலீஸ்ஸா ரெய்ஸ், மற்றும் உயர் பென்டகன்அதிகாரிகளுடன் பெர்னாண்டஸ் பேச்சு நடத்துவார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லையில் பெரும் பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்தப் பயணத்தைபெர்னாண்டஸ் மேற்கொள்வது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
கடந்த சில மாதங்களாகவே பல பென்டகன் மற்றும் சி.ஐ.ஏ. அதிகாரிகள் இந்தியாவுக்கு ரகசிய பயணங்கள்மேற்கொண்டு இந்திய உயர் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி வந்தனர். இதன் தொடர்ச்சியாகவே பெர்னாண்டஸ்அமெரிக்கா செல்கிறார்.
விரைவில் உள்துறை அமைச்சர் அத்வானியும் அமெரிக்கா செல்ல இருக்கிறார்.
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், துணை அதிபர் டிக் செனியையும் பெர்னான்டஸ் சந்திக்கவுள்ளார்.
அமெரிக்க ஆயுதத் தயாரிப்பு மையங்களுக்கும் பெர்னாண்டஸ் செல்வார்.












Click it and Unblock the Notifications