பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மேலும் நெருக்கடி
வாஷிங்டன்:
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் மீதான நடவடிக்கையை அதிபர் முஷாரப் மேலும் தீவிரப்படுத்த வேண்டும்என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் காலின் பாவல் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் அரசு தீவிரவாதிகளின் இயக்கத்தை முடக்கியுள்ளது, மேலும் பல தீவிரவாதிகளை கைது செய்துள்ளது.ஆனால் அது மட்டுமே போதாது, அவர் தீவிரவாதத்துக்கு எதிராக மேலும் தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று விரும்புகிறேன்..
எல்லோரும் சேர்ந்து பாகிஸ்தானை தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வற்புறுத்த வேண்டும்.தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் எடுக்கும் நடவடிக்கைகளை இந்தியா கவனித்து வருகிறது.
சார்க் மாநாடு முடிந்த பிறகு அவர் தீவிரவாதத்துக்கு எதிராக பல நடவடிக்கைகள் எடுப்பார் என்று நான்எதிர்பார்க்கிறேன். இரு நாடுகளும் போரை விடுத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும்.
தெற்காசியாவில் போர் நடக்கக் கூடாது என்று எல்லோரும் விரும்புகிறார்கள் என்று இரு நாடுகளுமேஉணர்ந்துள்ளது. அதனால் இரு நாடுகளும் சேர்ந்து தீவிரவாதத்துக்கு எதிராக போராட வேண்டும்.
சார்க்கின் விதிமுறைகளின்படி, சார்க் மாநாட்டில் இரண்டு நாட்டு தலைவர்களும் தங்கள் நாட்டு பிரச்சனையை பேசமுடியாது. ஆனால் வாய்ப்பு கிடைத்தால் இருவரும் தங்கள் நாட்டு சூழ்நிலையை பற்றி பேச வேண்டும் என்று அவர்கூறினார்.