For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அப்துல் லத்தீப் விஷம் வைத்து கொலையா? - சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அப்துல் லத்தீப்பை விஷம் வைத்துக் கொலை செய்துள்ளனர் என்றும் அதனால் அவரது மரணம் பற்றி சி.பி.ஐ.விசாரிக்க வேண்டும் என்றும் இந்திய தேசிய லீக் கட்சி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்திய தேசியலீக் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் சென்னையில் நேற்று (சனிக்கிழமை) அக்கட்சியின் அகிலஇந்திய தலைவர் சுலைமான் சேட் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழக பிரிவு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இது பற்றி சுலைமான் சேட் நிருபர்களுக்குஅளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

வாணியம்பாடி தொகுதிக்கு விரைவில் தேர்தல் நடக்கவுள்ளது. நியாயப்படி பார்த்தால் இந்த தொகுதியை அதிமுகஎங்களுக்கு தான் விட்டுத் தர வேண்டும். கேட்க வேண்டியது எங்கள் கடமை, தருவார்கள் என்று நம்புகிறோம்.

வாணியம்பாடியில் ஜெயலலிதா போட்டியிட்டால் எங்களுக்கு வேறு தொகுதி ஒதுக்க வேண்டும். அப்படிஒதுக்கவில்லை என்றால், வாணியம்பாடி தொகுதியில் போட்டியிடுவது தவிர வேறு வழியில்லை என்று அவர்கூறினார்.

பிறகு கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் நிர்வாகிகள் கூறியதாவது:

அப்துல் லத்தீப் சாவில் மர்மம் உள்ளது. லத்தீப் நல்ல உடல் நலத்துடன் தான் இருந்தார். இறப்பதற்கு முன் அவர்வி.பி.சிங் கூட்டத்தில் தெம்பாகத்தான் பேசினார்.

அடுத்த இரண்டு நாட்களில் இறந்து விட்டனர். அவார விஷம் கொடுத்து கொலை செய்துள்ளனர். காலை 6 மணிக்குஅவர் இறந்துள்ளார். 7.30 மணி வரை யாரிடமும் சொல்லவில்லை.

அவரது உடல் மருத்துவமனையில் இருந்த போது நான்கு பேர் அவரது வீட்டுக்கு வந்து, வீட்டில் இருந்த இரண்டுகோடி ரூபாயை எடுத்துச் சென்றுள்ளனர். பாங்க் பாஸ் புத்தகங்களையும் காணவில்லை.

இதனால் அவரது மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X