For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வங்கக் கடலில் புயல் சின்னம்: தமிழகத்தில் மீண்டும் மழை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வங்கக் கடலில் புதிதாகத் தோன்றியுள்ள புயல் சின்னம் காரணமாக சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில்மழை பெய்து வருகிறது.

கடந்த நவம்பர் மற்றும் டிசம்பரில் சென்னையில் அடை மழை பெய்தது. தொடர்ந்து விடாமல் ஒரு மாதத்திற்கு மேல்வரை இந்த மழை தொடர்ந்தது.

இதனால் மழையினால் அவதிப்பட்டு வந்த சென்னைவாசிகள் சமீபத்தில்தான் இயல்பு வாழ்க்கைக்குக் திரும்பினர்.

இந்நிலையில் வங்கக்கடலில் புயல் சின்னம் தோன்றியுள்ளதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது.

இதனால் அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் மழை பெய்து வருகிறது. நேற்று (திங்கள்கிழமை) இரவிலும்பெய்த கன மழை இன்று காலை வரை நீடித்தது. இன்னும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X