2006ல் ஆட்சியைப் பிடிப்போம்: ராமதாஸ்
சென்னை:
2006ம் ஆண்டு நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளைப் பிடித்து, தமிழகத்தில் ஆட்சி அமைப்போம் என்று பாமகநிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது பற்றி ராமதாஸ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
பாமக தொண்டர்கள் கட்சிக்கோ, கட்சித் தலைமைக்கோ துரோகம் செய்ய மாட்டார்கள். எங்கள் கட்சியில்விசுவாசமிக்கத் தொண்டர்கள் உள்ளனர்.
பாமகவில் உள்ள மூன்றில் ஒரு பங்கு எம்.எல்.ஏ.க்களை பிரித்துச் சென்று பாமகவை பிளவுப்படுத்த அதிமுகதிட்டமிட்டுள்ளது. எங்களை யாரும் பிரிக்க முடியாது.
ஆனால், சிவகாமி மட்டும் எப்படியோ அதிமுக சதிக்கு ஆளாகி விட்டார். அவர் செங்கோட்டையன் பிடியில்இருக்கிறார். இதன் மூலம் ஜெயலலிதாவை திருப்திப்படுத்த பார்க்கிறார் செங்கோட்டையன்.
சிவகாமி தனித்து இயங்குவார் என்றும், இதன் மூலம் பாமகவை மிரட்டிப் பார்க்கலாம் என்று அதிமுக நினைக்கிறது.அந்த கனவு பலிக்காது. அவர்கள் கையில் நாங்கள் சிக்க மாட்டோம்.
பாஜகவுக்கு ஆதரவாக ஜெயலலிதா செயல்பட்டாலும், அவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்க்க யாரும்தயாராக இல்லை.
நாங்கள் ஒவ்வொரு தேர்தலிலும் அதிக எம்.எல்.ஏ.க்களை பெற்று வருகிறோம். அதனால் 2006ம் ஆண்டு பாமகஆட்சி என்ற எங்களது லட்சியத்தில் எந்த மாற்றமும் இல்லை. 2006ல் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களைக்கைப்பற்றி தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்போம் என்று ராமதாஸ் கூறினார்.