புதுக்கோட்டை ரயில் நிலையத்துக்கு மனித வெடிகுண்டு மிரட்டல்
புதுக்கோட்டை:
தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்த ரேடியோ வெங்கடேசன், மாறன் இருவரையும் விடுதலைசெய்யவில்லையென்றால், புதுக்கோட்டை ரயில் நிலையத்தை மனித வெடிகுண்டு மூலம் தகர்க்க போவதாகமிரட்டல் கடிதம் வந்துள்ளது.
புதுக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக உள்ளவர் மனோகரன். இவருக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை)திருப்பூரில் போஸ்ட் செய்யப்பட்டு விடுதலைப்படைப் படை, அரியலூர் என்ற முகவரியுடன் ஒரு கடிதம் வந்தது.
இதில் புதுக்கோட்டை ரயில்வே ஸ்டேஷனை குண்டு வைத்து தகர்க்க போவதாக எழுதியிருந்தது. இதனால் நேற்றுரயில் நிலையத்தில் பதட்டம் ஏற்பட்டது. அந்த கடிதத்தில் இருந்த விவரம் வருமாறு:
சிறையில் இருக்கும் தமிழர் விடுதலைப் படையை சேர்ந்த ரேடியோ வெங்கடேசன், மாறன் மற்றும் அனைத்துவிடுதலைப் படையினரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும்.
வீரப்பனை பிடிப்பதற்காக காட்டிற்குள் சென்றுள்ள அதிரடிப் படையினரை உடனே திரும்ப அழைக்க வேண்டும்.இல்லையென்றால் புதுக்கோட்டை-காரைக்குடிக்கு இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் ஆள் இல்லாத இடத்தில்சக்தி வாய்ந்த வெடிகுண்டு வைக்கப்படும்.
மனித வெடிகுண்டுக்காரர்கள் ரயில் பெட்டியில் சமயம் பார்த்து ஏறுவார்கள். போலீஸ் விழிப்புடன் இருந்தாலும்விடுதலைப் படையினர் வெற்றிகரமாக ரயில் பெட்டி மற்றும் தண்டவாளத்தில் குண்டு வைப்பார்கள்.
புதுக்கோட்டை மற்றம் காரைக்குடி ஸ்டேஷன் மாஸ்டர்களின் தலை இன்னும் 75 நாட்களில் துண்டிக்கப்படும். ரயில்நிலையத்தின் பின்புறம் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடிக்கும், இப்படிக்கு விடுதலைப்படை, அரியலூர் எனஎழுதப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து ரயில் நிலையத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து காரைக்குடிவரை உள்ள ரயில் தண்டவாளம் டிராலி மூலம் கண்காணிக்கப்படுகிறது. புதுக்கோட்டை வழியாக செல்லும்அனைத்து ரயில்களும் பலத்த சோதனை செய்யப்பட்ட பின்பே அனுப்பப்படுகிறது.
இதேபோல் ஒரு கடிதம் கடந்த நவம்பர் 26ம் தேதி புதுக்கோட்டை ரயில் நிலையத்துக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications