அதிமுக - இந்திய கம்யூனிஸ்ட் உறவு முறிவு
சென்னை:
வரும் சட்டசபை இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரிக்கப் போவதில்லை என்று இந்தியகம்யூனிஸ்ட் கட்சி அறிவித்ததையடுத்து, அவ்விரு கட்சிகளுக்கு இடையிலான உறவு முறிந்தது.
"பாஜகவுடன் அதிமுக சிறிது சிறிதாக நெருங்கிக் கொண்டிருப்பதை நாங்கள் ஆரம்பத்திலிருந்தே கவனித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
ஆனால் பாஜகவுடனான நெருக்கத்தை மறுத்து இதுவரை அதிமுகவினர் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.அதனால்தான் இந்த முடிவுக்கு வந்துள்ளோம்" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர்ஆர். நல்லக்கண்ணு கூறினார்.
மேலும் விலைவாசி மற்றும் பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையையும்அதிமுக அரசு நிராகரித்து விட்டது என்றும் அவர் கூறினார்.
இதையடுத்து வரும் சட்டசபை இடைத் தேர்தலில் அதிமுகவை ஆதரிக்கப் போவதில்லை என்று இன்று நடந்தஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
திமுகவையும் ஆதரிக்க மாட்டோம் என்றும் நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார். மற்ற இடது சாரிக் கட்சிகளுடனும்மதச்சார்பற்ற கட்சிகளுடனும் கலந்தாலோசித்த பிறகு கட்சியின் இறுதி முடிவைத் தெரிவிப்போம் என்றும் அவர்கூறினார்.












Click it and Unblock the Notifications