இந்தியாவில் புலிகள் பேச்சுவார்த்தை நடத்த வீரமணி ஆதரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நார்வே குழுவினருடன் விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தையை இந்தியாவில் நடத்த அனுமத்திக்கலாம் என்றுதிராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இலங்கையில் அமைதியை ஏற்படுத்த விக்கிரமசிங்கே தலைமையிலான அரசு முயன்று வருகிறது. அதற்காகஇந்தியாவிடம் உதவியும் கோரியுள்ளது. இந்தியாவும் இவ்விஷயத்தில் இலங்கைக்கு உதவுவதாகக் கூறியுள்ளது.

நார்வே சமாதானக்குழுவும் இலங்கை-விடுதலைப்புலிகளிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியில்ஈடுபட்டு வருகிறது.

சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இந்தியாவில் உள்ள சென்னை, திருவனந்தபுரம், பேங்களூர் ஏதாவது ஒன்றில் நடத்தஅனுமதிக்குமாறு இந்திய அரசிடம் விடுதலைப்புலிகள் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆனால் இந்தக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று தமாகா தலைவர்களில் ஒருவரானஎஸ்.ஆர். பாலசுப்பிரமணியமும் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமியும் கூறியுள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதியோ, மத்திய அரசு எடுக்கும் எந்த நிலையையும் ஆதரிப்பதாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து வீரமணி நேற்று (செவ்வாய்க்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இலங்கைப் பிரச்சினை விரைவில் தீருவதற்கு மத்திய அரசு உதவ வேண்டும்.

இதுகுறித்த பேச்சுவார்த்தைக்கு உதவுவோம் என்று ஏற்கனவே மத்திய அரசும் அறிவித்துள்ளது.

அதன்படி விடுதலைப் புலிகள் தற்காலிகமாக இந்தியாவில் தங்கி, பேச்சுவார்த்தை நடத்த அனுமதிக்கலாம் என்றுஅவ்வறிக்கையில் வீரமணி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+