கலை நிகழ்ச்சிகளுக்காக நடிகைகளை சிங்கப்பூர் அழைத்துச் சென்ற செக்ஸ் டாக்டர்
சென்னை:
கலை நிகழ்ச்சிகளுக்காக சினிமா நடிகைகளை "செக்ஸ்" டாக்டர் பிரகாஷ் சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்ற தகவல்இப்போது வெளியாகி உள்ளது.
சினிமா நடிகைகள் உட்பட பல பெண்கள், ஆண்களை வைத்து ஆபாசப் படம் எடுத்து இன்டர்நெட்டில் உலாவவிட்ட டாக்டர் பிரகாஷை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விசாரணையில் நாள்தோறும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவரது பாஸ்போர்ட்டைபறிமுதல் செய்து விசாரணை நடத்திய போலீசாருக்கு அவர் அடிக்கடி வெளிநாடு சென்று இருப்பது தெரியவந்துள்ளது.
மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுக்கு இவர் சென்று வந்துள்ளார்.அப்போது அவர் இளம்பெண்களை அழைத்துச் சென்றதும் தற்போது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவர் கைது செய்யப்படுவதற்கு முன் கடைசியாக சில வாரங்களுக்கு முன் சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். அங்குஅவர் இருந்த போது சினிமா கலை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு காமெடி நடிகர் மூலம் பல நடிகைகள் சிங்கப்பூர் சென்று அந்த சமயத்தில் கலை நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார்கள்.இந்த நிகழ்ச்சிக்கு பின்னணியில் இருந்தது டாக்டர்தான் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
காமெடி நடிகரை தனக்கு பக்கபலமாகப் பயன்படுத்திக் கொண்டு கலைநிகழ்ச்சி நடத்துவதாக கூறி அழைத்துச்சென்றுள்ளார். ஆனால் டாக்டர் பிரகாஷ்தான் கலைக்குழுவின் பின்னணியில் இருந்தார் என்று நடிகைகளுக்குத்தெரியுமா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கலை நிகழ்ச்சியின் போது என்ன நடந்தது, தன்னுடைய ஆபாச சிடி கேசட்டுகளை விற்பனை செய்வதற்காக இதுபோன்ற கலைநிகழ்ச்சி என்ற போர்வையில் சிங்கப்பூருக்கு சென்று வந்தாரா என பல்வேறு கோணங்களில் டாக்டர்பிரசாசிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications