காணாமல் போன மாஜி அதிமுக எம்.எல்.ஏவைத் தேட தனி போலீஸ் படை
சென்னை:
காணாமல் போன முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.வும், தற்போதைய திமுக பிரமுகருமான பாலனைத் தேடுவதற்காகதனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 30ம் தேதி காலை வாக்கிங் சென்ற பாலன் இதுவரை வீடு திரும்பவில்லை.
தனது தந்தையை சி.பி.சி.ஐ.டி. போலீசார்தான் கடத்திச் சென்றுள்ளதாகவும், அவரை மீட்டுத் தருமாறு உயர்நீதிமன்றத்தில் அவரது மகன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதிமுகவினர் தான் பாலனை கடத்திச் சென்றுள்ளதாக திமுகவினரும் கூறியுள்ளனர். அதிமுகவின் உத்தரவின்பேரிலேயே போலீசார் அவரைக் கடத்திச் சென்று திமுகவுக்கு எதிராக வாக்குமூலம் பெறும் முயற்சியில் போலீசார்இறங்கியிருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
ஆனால் சி.பி.சி.ஐ.டி. போலீசாரோ நாங்கள் யாரையும் கைது செய்யவில்லை என்று கூறியுள்ளனர். இந்நிலையில்இந்த வழக்கு மீதான விசாரணை தமிழ்நாடு கிரைம் பிராஞ்ச் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து பாலனைத் தேடும் வேட்டையை கிரைம் பிராஞ்ச் போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
பாலனை மீட்க உதவுபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்றும் கிரைம் பிராஞ்ச் போலீசார்கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications