17ம் தேதி முதல் இடைத் தேர்தல் வேட்பு மனுத்தாக்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் 3 சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 17ம் தேதிமுதல் துவங்குகிறது.
சைதாப்பேட்டை, ஆண்டிப்பட்டி, வாணியம்பாடி ஆகிய 3 சட்டசபைத் தொகுதிகளுக்கான காலியிடத்தை நிரப்பும்வகையில் இந்த மூன்று தொகுதிகளுக்கும் பிப்ரவரி மாதம் 21ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கான முறைப்படியான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வருகிற 17ம் தேதி வெளியிடுகிறது. அன்று முதல்வேட்பு மனுத்தாக்கலும் துவங்குகிறது.
வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் 24ம் தேதியாகும். தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 25ம்தேதி பரிசீலிக்கப்படும்.
வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் 28ம் தேதியாகும். அடுத்த மாதம் 21ம் தேதி தேர்தல் நடைபெறும்.












Click it and Unblock the Notifications