For Daily Alerts
Just In
ஊட்டியை வாட்டும் கடும் பனி
சென்னை:
ஊட்டியில் கடும் குளிரும், பனியும் நிலவுவதால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள முக்கிய கோடை வாசஸ்தலமான ஊட்டியில் கடும் பனி கொட்டுகிறது. இதன் காரணமாக அங்குஇயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் மக்கள் நடமாட்டத்தை அதிகம் பார்க்க முடிவதில்லை. கடும் பனி காரணமாக ஊட்டிக்கு வந்துள்ளசுற்றுலாப் பயணிகள் வெளியே செல்ல முடியாமல் லாட்ஜ்களிலும், விடுதிகளிலும்முடங்கிக் கிடக்கின்றனர்.
உருளைக்கிழங்கு, பூண்டு போன்ற பயிர்களின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.
Story first published: Tuesday, January 15, 2002, 5:30 [IST]