ஜல்லிக்கட்டு: காளையை அடக்க முயன்ற 140 பேர் படுகாயம்
மதுரை:
மதுரை பாலமேடு அருகே நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்த ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டி 140 பேர்படுகாயமடைந்தனர்.
மாட்டுப் பொங்கள் தினமான நேற்று மதுரை, தஞ்சாவூர், தர்மபுரி மாவட்டங்களில் பல இடங்களில் ஜல்லிக்கட்டுபோட்டி நடந்தது. இந்த போட்டியில் காளைகளின் கழுத்தில் பணக்கட்டு, மோதிரங்கள் ஆகியவைகட்டப்பட்டிருந்தன.
காளையை அடுக்குபவர்களுக்கு அந்த காளையின் கழுத்தில் இருக்கும் பண முடிப்பு அவர்களுக்கே தரப்பட்டது.யாராலும் அடக்க முடியாத காளையின் சொந்தக் காரருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம் பாலமேடு என்ற இடத்திலும் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. திருச்சி, மேலூர், விருதுநகர்,ராமநாதபுரம் போன்ற ஊர்களிலிருந்தும் காளைகள் கொண்டு வரப்பட்டன.
மாலை 5 மணி வரை 250க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. இதில் மாடுகளை அடக்க முயன்ற 140பேர் மாடு முட்டி படுகாயமடைந்தனர்.
இவர்களில் புதுப்பட்டி பாண்டி (55), பாலமேடு ராமச்சந்திரன் (38), வெள்ளையம்பட்டி சுப்பிரமணி (32) உட்படஎட்டு பேர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமயிைல் சிகிச்சை பெற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications