ஆண்டிப்பட்டியில் ஜெ.தான்: அதிமுக அறிவிப்பு
சென்னை:
ஆண்டிப்பட்டி தொகுதி இடைத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடுவார் என்று அதிமுக இன்று (புதன்கிழமை)அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
டான்சி வழக்கில் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து, தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடுவதற்கு இருந்த தடைநீங்கியது.
இதையடுத்து ஆண்டிப்பட்டியில்தான் தான் போட்டியிடப் போவதாக தீர்ப்பு வெளியான டிசம்பர் 4ம் தேதியன்றேஜெயலலிதா கூறியிருந்தார்.
ஆனாலும் அவர் போட்டியிடுவது பற்றி இன்றுதான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா போட்டியிடுவதற்கு வசதியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பே ஆண்டிப்பட்டி தொகுதிஎம்.எல்.ஏவாக இருந்த தங்கத் தமிழ்ச்செல்வன் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக வந்த புகாரையடுத்து, சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடிதொகுதிகளில் இடைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஆண்டிப்பட்டி தொகுதி மட்டும் தப்பிவிட்டதுகுறிப்பிடத்தக்கது.