கண்ணகி சிலை அகற்றம்: அமைச்சர் விளக்க
கன்னியாகுமரி:
சென்னை மெரீனா கடற்கரையில் இருந்த கண்ணகி சிலை விபத்தில் சேதமடைந்த காரணத்தால்தான் அங்கிருந்துஅகற்றப்பட்டது என தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் தளவாய் சுந்தரம் கூறியுள்ளார்.
கன்னியாகுமரியில் அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
சாலை விபத்தில் கண்ணகி சிலை மீது லாரியொன்று மோதியதில் சிலையின் பீடம் சேதமடைந்தது. அப்படியேவிட்டால் சிலை கீழே விழுந்து விடும் என்ற காரணத்தால்தான் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு சென்னைஅருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.
சிலையை அகற்றியதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. ஆனால் திமுக தலைவர் கருணாநிதி இதைஅரசியலாக்கி வருகிறார். தினமும் ஏதாவது அறிக்கை விட்டு மக்களை திசை திருப்பப் பார்க்கிறார்.
சிலையை மீண்டும் பத்திரமான இடத்தில் வைப்பது குறித்து, இதுதொடர்பாக அமைக்கப்பட்டுள்ள கமிஷன்பரிந்துரையை நீதிமன்றத்தின் முன் வைத்து, நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படியே அடுத்தகட்ட நடவடிக்கையைதமிழக அரசு எடுக்கும் என்றார் தளவாய் சுந்தரம்.












Click it and Unblock the Notifications