திருவள்ளூர் அருகே காலரா நோய்க்கு சிறுவன் பலி

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் காலரா நோய் பரவியதில் ஒரு சிறுவன் பலியாகி உள்ளான்.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் திடீரென்று காலரா நோய் பரவியுள்ளது. அதிலும் குறிப்பாக சோழவரம் என்றஊர் இந்த காலரா நோயால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் 150 பேருக்கு திடீரென்று வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் சென்னைதண்டையார் பேட்டை, கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, அவர்களுக்குதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் 12 வயது சிறுவன் ஒருவன் சிகிச்சைப் பலனளிக்காமல் இறந்து போனான். இந்த மாவட்டத்தில் பெரும்பாலும்ஒரிசா போன்ற பிற மாநிலங்களில் இருந்து வந்து செங்கல் சூளைகளில் வேலை பார்ப்பவர்கள் தான் அதிக அளவில்பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாவட்டத்திற்கு மருத்துவக்குழு விரைந்து சென்று முகாம்கள் அமைத்து மக்களுக்கு காலரா நோய் தடுப்பதுபற்றி விளக்கிக் கூறி வருகின்றனர். மாவட்ட ஆட்சித்தலைவர் சிவசங்கரன் காலரா நோய் மேலும் பரவாமல் தடுக்கநடவடிக்கை எடுக்கும்படி மருத்துவக்குழுக்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்தப் பகுதியில் குடிநீரில் தொற்று நோய்க் கிருமி பரவி இருப்பதால் தான் காலரா நோய் பரவியுள்ளதாககண்டுபிடித்துள்ளனர். எனவே, பொதுமக்கள் குடிநீரைக் காய்ச்சி குடிக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+