வாக்காளர் பட்டியலில் முறைகேடு இல்லை: தேர்தல் அதிகாரி
சென்னை:
ஆண்டிப்பட்டி வாக்காளர் பட்டியலில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று அங்கு விசாரணை நடத்தியதேர்தல் அதிகாரியான கே.ஜே. ராவ் கூறி உள்ளார்.
தேர்தல் அதிகாரி ராவ் நடத்திய விசாரணையின்படி வாணியம்பாடி, சைதாப்பேட்டை தொகுதிகளுக்கானஇடைத்தேர்தலை தலைமை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. ஆண்டிப்பட்டியில் மட்டும் தேர்தல் நடக்கும் என்றுதேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஆனால் திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள், ஆண்டிப்பட்டியிலும் முறைகேடு நடந்துள்ளதால் அங்கும் தேர்தலைதள்ளி வைக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனிடம் கோரிக்கை விடுத்தன.
ஆனால் பிப்ரவரி 21ம் தேதி ஆண்டிப்பட்டியில் தேர்தல் நடக்கும் என்று முறையான அறிவிப்பை நேற்று(வியாழக்கிழமை) அறிவிக்கப்பட்டதோடு, நேற்று முதல் வேட்பு மனுத் தாக்கலும் தொடங்கியது. இது தொடர்பாகராவ் நிருபர்களிடம் கூறியதாவது:
ஆண்டிப்பட்டி தொகுதியில் நடந்த வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி, தேர்தல் கமிஷனுக்கு முழு திருப்திஅளிக்கிறது. அங்கு என்னை சுதந்திரமாக செயல்பட அதிகாரிகள் விடவில்லை என திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளகுற்றச்சாட்டு உண்மையானதல்ல.
சைதாப்பேட்டை, வாணியம்பாடி தொகுதிகளில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து குறிப்பிட்ட தகவல்களைதெரிவித்தனர். ஆனால் ஆண்டிப்பட்டியில் பொதுவான குற்றச்சாட்டுக்களைக் கூறினர்.
ஆண்டிப்பட்டியில் 16 கிராமங்களில் அதிகளவில் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அதில்இரண்டு கிராமங்களில் நான் நேரில் ஆய்வு நடத்துவதற்கு அதிகாரிகள் முழு ஒத்துழைப்புக் கொடுத்தனர்.
அதில் முறைகேடுகள் எதுவும் நடந்ததாக தெரியவில்லை. எனவே குறிப்பிட்டு புகார் கொடுத்தால் அதை பரிசீலிக்கதயாராகவே உள்ளோம். தற்போது அங்கு தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும் என்று ராவ் கூறினார்.