ஆண்டிப்பட்டியில் குவியும் அதிமுக எம்.எல்.ஏக்கள்
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி தொகுதியில் பிரச்சாரம் செய்வதற்காக அதிமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் குவிந்துகொண்டிருக்கிறார்கள்.
என்னதான் சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடி தொகுதிகளில் இடைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டாலும்,ஆண்டிப்பட்டியில் மட்டும் நிச்சயம் தேர்தல் நடக்கும் என்று அதிமுகவினர் நம்பி விட்டனர் போலும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே இத்தொகுதியில் ஏராளமான நலத்திட்டப் பணிகள்மேற்கொள்ளப்பட்டு விட்டன. மேலும் பல எம்.எல்.ஏக்களும் எம்.பிக்களும் தங்கள் தொகுதிக்காக ஒதுக்கப்பட்டபணத்தை ஆண்டிப்பட்டி தொகுதிக்காக வாரி இறைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையே திமுக உள்பட பல எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக அதிமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் ஆண்டிப்பட்டியில் குவியத்தொடங்கியுள்ளனர்.
கடந்த ஒரு மாத காலமாகவே அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆண்டிப்பட்டியில் தேர்தல் பணிகளை இடைவிடாமல்மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் மொத்தம் 132 அதிமுக எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இந்த 132 பேருமே ஆண்டிப்பட்டிக்கு வந்துபிரச்சாரத்தில் ஈடுபடப் போவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
இவர்களே வந்து குவிகிறார்கள் என்றால், அமைச்சர்களைப் பற்றிக் கேட்கவே தேவையில்லை.
ஜெயலலிதாவும் ஆண்டிப்பட்டிக்கு வந்து 5 நாள்கள் தங்கியிருந்து கிராமம் கிராமமாகச் சென்று வாக்கு சேகரிப்பார்என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. அவருக்காக ஏற்கனவே ஒரு வீடு வெகுவேகமாகத் தயாராகிவருகிறது.












Click it and Unblock the Notifications