For Daily Alerts
Just In
மேலும் 4 சுயேச்சைகள் மனு தாக்கல்
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி தொகுதியில் மேலும் 4 பேர் சுயேச்சையாகப் போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அடுத்த மாதம் 21ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ள ஆண்டிப்பட்டி தொகுதியில் கடந்த 17ம் தேதி வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது.
வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய அன்றே ஜவகர் அலி மற்றும் பத்மராஜன் ஆகிய 2 பேர் சுயேச்சையாகமனுத்தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை) மேலும் 4 பேர் சுயேச்சையாக மனுத்தாக்கல் செய்தனர்.
சென்ராயன், ஐயர் தேவர், கண்ணன் மற்றும் புஷ்பராஜ் ஆகிய இந்த 4 பேரும் மனுத்தாக்கல் செய்ததையடுத்து,இதுவரை ஆண்டிப்பட்டியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.
Comments
Story first published: Sunday, January 20, 2002, 5:30 [IST]