For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விழுப்புரம் அதிமுக கவுன்சிலர் வெட்டிக் கொலை

By Staff
Google Oneindia Tamil News

விழுப்புரம்:

விழுப்புரம் நகராட்சி அதிமுக கவுன்சிலர் டி. கோவிந்தன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு வெட்டிக் கொலைசெய்யப்பட்டார்.

கீழ்ப்பெரும்பாக்கத்தைச் சேர்ந்த கோவிந்தன் (27) விழுப்புரம் நகராட்சியின் 5வது வார்டு உறுப்பினராவார்.

பஜனை கோவில் அருகே அவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது, கோவிந்தனை ஒரு கும்பல்வழிமறித்து, பயங்கரமான ஆயுதங்களால் சராமாரியாக வெட்டிச் சாய்த்தது.

படுகாயங்களுடன் கோவிந்தன் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால்செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

வட்டிக்குக் கடன் கொடுக்கும் தொழிலைச் செய்து வந்த கோவிந்தன், சிலருக்குக் கடன் கொடுக்க மறுத்ததாகக்கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே கோவிந்தன் கொலை செய்யப்பட்டதாக அதிமுகவினர் கூறினர்.

கோவிந்தனைக் கொன்றவர்களை உடனே கைது செய்யக் கோரி அதிமுகவினர் விழுப்புரம் அரசு மருத்துவமனைமுன் மறியல் செய்தனர்.

போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலைகாரர்களைத் தேடி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X