ஆப்கானிஸ்தானில் கோபி அன்னான்
காபூல்:
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கோபி அன்னான் ஆப்கானிஸ்தான் சென்று சேர்ந்தார்.
பின்னர் அவர் இன்று காலை ஆப்கானிஸ்தான் போய்ச் சேர்ந்தார்.
தலிபான்களை விரட்டிய பிறகு பிரதமர் ஹமீத் கர்சாய் தலைமையிலான இடைக்கால அரசு ஆப்கானிஸ்தானில்ஆட்சி செய்து வருகிறது.
அந்த நாட்டுக்குப் பாதுகாப்புக்காக பிரிட்டிஷ், அமெரிக்கா உட்பட பல நாட்டு வீரர்கள் அங்கு பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலுக்கு அன்னான் வந்து சேர்ந்துள்ளார்.
கர்சாய் உள்பட பல தலைவர்களையும் அமைதிப் பாதுகாப்புப்படை கமாண்டோக்களையும் அன்னான் சந்திக்கஉள்ளார்.
கராச்சி விமான நிலையத்தில் அமெரிக்க ராணுத்தினர்:
ஆப்கானிஸ்தானில் சீரமைப்புப் பணிகளையும் பாதுகாப்புப் பணிகளையும் தொடர்ந்து கண்காணிப்பதற்குவசதியாக, பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்திற்கு அமெரிக்க ராணுவத்தினர் வந்து சேர்ந்தனர்.
இந்த விமான நிலையம் முழுவதையும் பயன்படுத்திக் கொள்ள அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் ஏற்கனவேஅனுமதியளித்துள்ளது.
கே.சி.130 ரக விமானம் மூலம் 30 அமெரிக்க ராணுவ வீரர்கள் வந்தனர். மேலும் எப்-28 கார்கோ விமானமும், 4ராணுவ ஹெலிகாப்டர்களும் கராச்சிக்கு வந்தன.
இந்த விமான நிலையத்தை 11 நாடுகளை சேர்ந்த 600 பாதுகாப்புப் படை வீரர்கள் பயன்படுத்த உள்ளனர்.