கொல்கத்தா: அன்சாரிக்கு எதிராக இன்டர்போல் பிடிவாரண்ட்
டெல்லி:
கொல்கத்தாவில் தாக்குதல் நடத்திய ஆப்தாப் அன்சாரிக்கு என்ற பர்ஹான் மாலிக்குக்கு எதிராக இன்டர்போல்அமைப்பு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
இதனால் ஆப்தாப் அன்சாரியை துபாய் அரசு கைது செய்தாக வேண்டும். ஆனால், அந்த அரசு என்ன நடவடிக்கைஎடுக்கப் போகிறது என்று தெரியவில்லை.
அத்வானி மேலும் கூறுகையில்,
துபாயில் வசித்து வரும் இவன் தனது அமைப்பினர் தான் கொல்கத்தா தாக்குதலை நடத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளான். இவனைப் பிடித்து இந்தியாவுக்குக் கொண்டு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
இதன் முதல்கட்டமாகத் தான் சி.பி.ஐயின் வேண்டுகோளின்பேரில் இன்டர்போல் போலீசார் இந்தபிடிவாரண்ட்டைப் பிறப்பித்துள்ளனர்.
பாகிஸ்தானிடம் கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள 20 தீவிரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்கஎந்தவிதமான காலக்கெடுவும் விதிக்கப்படவில்லை.
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் வருவது குறைந்துவிட்டதாக அமெரிக்கா கூறுகிறது.ஆனால், இது குறித்து உடனடியாக ஏதும் கூற முடியாது. குறைந்தபட்சம் 2 மாதங்களாவது பொறுத்துப் பார்த்தால்தான் உண்மையான நிலைமை தெரியவரும்.
இந்தியாவில் நடந்த எந்தத் தாக்குதல் குறித்தும் எப்.பி.ஐ. போலீசார் விசாரிக்கவில்லை.
கொடிகளுக்கு விடுதலை:
நாளை முதல் இந்திய தேசியக் கொடியை பொது மக்களும் பறக்கவிடலாம், கொடியை யார் வேண்டுமானாலும்பயன்படுத்தலாம். தேசியக் கொடிக்கு எந்தவிதமான களங்கமும் ஏற்படாத வகையில் அதை எப்படி வேண்டுமாலும்பயன்படுத்தலாம்.
பொது மக்கள் தங்கள் வீடுகளிலும் அலுவலகங்களிலும் கொடியைப் பறக்கவிடலாம் என்றார்.












Click it and Unblock the Notifications