அழகிரி பிறந்தநாள்: அல்லோலப்படுகிறது மதுரை
மதுரை:
திமுக தலைவர் கருணாநிதியின் மகனும், தென் மாவட்ட திமுகவில் முக்கியப் புள்ளியாக விளங்குபவருமானமு.க.அழகிரியின் 51-வது பிறந்த நாள் விழா இன்று (புதன்கிழமை) மதுரையில் படு கோலாகலமாககொண்டாடப்படுகிறது.
அழகிரியின் 51-வது பிறந்த நாளையொட்டி முன்னாள் மேயர் குழந்தைவேலு தலைமையில் குழு அமைத்து பெரும்பொருட் செலவில் ஆடம்பர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நகரெங்கும் சாலைகளை மறிக்கும் வகையில் திமுக கொடிகள், அழகிரியின் கட் அவுட்கள், பேனர்கள்,தோரணங்கள், அலங்கார வளைவுகள் என மதுரையே அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்கிறது.
திருமண மண்டபங்கள் நிறைந்த காமராஜர் சாலையில் உள்ள மிகப் பெரிய திருமண மண்டபம் ஒன்று வாடக்ைகுப்பிடிக்கப்பட்டுள்ளது. அங்குதான் பிறந்த நாள் விழாவிற்காக வரும் தொண்டர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.
ஆண்டிப்பட்டி தேர்தலில் திமுக வேட்பாளர் வைகை சேகருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக, அழகிரி பிறந்தநாளின்போது அவரை வாழ்த்த வருபவர்கள் வெறும் சால்வைகள், பொன்னாடைகளோடு நின்று விடாமல்பணமாகவும் அன்பளிப்புகளைத் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
வழக்கமாக அழகிரியின் பிறந்த நாள் ஆடம்பரமாக கொண்டாடப்படும் போதெல்லாம் திமுக மேலிடம் எரிச்சலைக்காட்டும். ஆனால் இம்முறை ஆண்டிப்பட்டி தேர்தலில் அழகிரி காலை வாரி விட்டு விடாமல் இருக்க வேண்டுமேஎன்பதற்காக பச்சைக் கொடி காட்டி விட்டதாகத் தெரிகிறது.
பிறந்த நாள் ஏற்பாடுகளால் மதுரையே மிரண்டு கொண்டிருக்கையில், இதுபற்றிக் கவலைப்படாமல் இருக்கும்அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:
எனது தலைவர் கருணாநிதி வழியில் தொடர்ந்து நடப்பேன். திமுகதான் எனது கட்சி. அதை பலப்படுத்துவதே எனதுநோக்கம்.
தென் மாவட்டங்களில் திமுகவை மிகப் பெரும் கட்சியாக தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள தீவிரமாகப்பாடுபடுவேன். ஆண்டிப்பட்டியில் திமுகவுக்கு வெற்றி நிச்சயம் என்று அழகிரி கூறினார்.












Click it and Unblock the Notifications