ஆண்டிப்பட்டி தேர்தல்: இரவு 11 மணி வரை பிரச்சாரம் செய்யலாம்
சென்னை:
ஆண்டிப்பட்டி தொகுதியில் நள்ளிரவு 11 மணி வரை பிரச்சாரம் செய்வதற்கு தேர்தல் கமிஷன்அனுமதியளித்துள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது வழக்கமாக நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் இரவு 10 மணிக்கு மேல்பிரச்சாரம் செய்யக் கூடாது என்பதுதான் தேர்தல் விதியாக இருந்தது.
இதனால் பிரச்சாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் இரவு 10.01 மணி ஆனால்கூட"கப்சிப்" ஆகிவிடுவார்கள். அதற்குப் பிறகு வெறுமனே சைகை மூலம்தான் வாக்குச் சேகரிப்பார்கள்.
ஆனால் ஆண்டிப்பட்டி தொகுதியில் நகராட்சிப் பகுதிகள் எதுவும் இல்லை. வடுகப்பட்டி, ஆண்டிப்பட்டி எனஇரண்டு பேரூராட்சிகள் மட்டுமே இருக்கின்றன.
எனவே ஆண்டிப்பட்டி தொகுதியில் இரவு 11 மணி வரை பிரச்சாரம் செய்வதற்கு தேர்தல் கமிஷன்அனுமதியளித்துள்ளது.
இதனால் கட்சிப் பிரமுகர்கள் கூடுதலாக ஒரு மணி நேரம் பிரச்சாரம் செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications