ஆண்டிப்பட்டியில் தினகரன் விறுவிறுப்பான பிரசாரம்
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் அம்மாவை(ஜெயலலிதாவை) குறைந்தது 1 லட்சம் வாக்குகள்வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்து அனுப்புங்கள் என்று கூறி பெரியகுளம் எம்.பியான தினகரன் மக்களிடம்பிரசாரம் செய்தார்.
ஆண்டிப்பட்டி தேர்தல் களை கட்டத் தொடங்கி விட்டது.
தேர்தல் கமிஷனின் பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக அதிமுகவினரின் தேர்தல் பிரசாரம் ஆடம்பரமானஅளவில் இல்லாவிட்டாலும், அதிமுகவினர் தேனீக்களைப் போல் படு சுறுசுறுப்பாகவே பிரசாரத்தில்இறங்கியுள்ளனர்.
ஆண்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட சுப்புலாபுரம் என்ற இடத்தில் தினகரன் பிரசாரம் செய்தார். அங்கு அவர் கிராமமக்களிடையே பேசுகையில் கூறியதாவது:
உங்கள் அன்புக்குரிய அம்மா இங்கு போட்டியிடுகிறார். அவரை நீங்கள் ஜெயிக்க வைக்கப் போவது உறுதி.ஆனால் குறைந்தபட்சம் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவரை ஜெயிக்க வைக்க வேண்டும்.
அம்மா தேர்தலில் நிற்காமல் தடுப்பதற்கு திமுகவினர் கடுமையான முயற்சிகள் செய்து வருகின்றனர். ஆனால்அவை எதுவுமே பலிக்கப் போவதில்லை. அவர்களுக்கு படுதோல்வி நிச்சயம்.
பெரியகுளம் எம்.பி. தொகுதி நிதியிலிருந்து ஆண்டிப்பட்டிக்கு ரூ.7 லட்சம் ஒதுக்கியுள்ளேன். அதன் கீழ் பல்வேறுநலப் பணிகள் நடந்துள்ளன.
ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ.வாக இருந்த தங்கத்தமிழ்ச் செல்வன் தனது எம்.எல்.ஏ. நிதியிலிருந்து ரூ.1 லட்சம்ஒதுக்கியுள்ளார். நீண்ட கால கோரிக்கையான கூட்டுக் குடிநீர்த் திட்டம் ரூ.100 கோடி செலவில் தொடங்கியுள்ளது.
திமுகவினர் வசம் இந்தத் தொகுதி இருந்தபோது இல்லாத பல வசதிகளை அதிமுக ஆட்சி செய்துள்ளது. இதைமறவாது மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார் தினகரன்.












Click it and Unblock the Notifications