ஜான் பாண்டியன் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை:
மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் கோரிய ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து சென்னைஉயர் நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) உத்தரவிட்டது.
சென்னை-அண்ணாநகரைச் சேர்ந்த தொழிலதிபர் அஜய்க்கும், அவரது பங்குதாரர் முருகனுக்கும் இடையே ரூ.3.5லட்சம் பணத்தகராறு இருந்து வந்தது. இதில் முருகனுக்கு ஆதரவாக ஜான் பாண்டியன் தலையிட்டுள்ளார்.
இதையடுத்து அஜயையும், அவரது மேனேஜரையும் கடத்திச் சென்று பணத்தைக் கேட்டதோடு மேனேஜர் சுனிலைகத்தியால் குத்தியதாக ஜான் பாண்டியன் மீது அஜய் போலீசில் புகார் கொடுத்தார்.
இது தொடர்பாக ஜான் பாண்டியனை கடந்த 20ம் தேதி சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைதுசெய்து சென்னை மத்திய சிறையில் அடைத்தனர்.
பிறகு ஜான் பாண்டியன் தனக்கு ஜாமீன் வழங்குமாறு சென்னை கூடுதல் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். ஆனால் இந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இதனால் எனக்கும், இந்த வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால் எனக்கு உடனடியாக ஜாமீன் கொடுக்கவேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜான் பாண்டியன் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி மலை சுப்பிரமணியம், ஜான் பாண்டியன் ஏற்கனவே நிறைய கொலைவழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பதால், அவரது ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications