ஆண்டிப்பட்டியில் பிப்.16, 17ல் கருணாநிதி பிரசாரம்
சென்னை:
பிப்ரவரி மாதம் 16 மற்றும் 17 ஆகிய 2 நாட்களில் ஆண்டிப்பட்டி தொகுதியில் பிரசாரம் செய்ய திமுக தலைவர்கருணாநிதி திட்டமிட்டுள்ளார்.
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளராக வைகை சேகர் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில்ஜெயலலிதா போட்டியிடுகிறார்.
வைகை சேகரை ஆதரித்து கருணாநிதி பிரசாரம் செய்வது குறித்து சந்தேகம் இருந்தது. அவருக்கு மூட்டு வலிஇருப்பதால் தொடர்ந்து நின்றபடி பிரசாரம் செய்வது, பேசுவது சிரமம் என்பதால் அவர் வரமாட்டார் என்றுகூறப்பட்டது.
ஆனால் வைகை சேகருக்கு ஆதரவாக தான் பிரசாரம் செய்யப் போவதாக கருணாநிதி 2 நாட்களுக்கு முன்அறிவித்தார்.
அதன்படி பிப்ரவரி 16ம் தேதி அவர் ஆண்டிப்பட்டியில் பிரசாரம் செய்கிறார். இதற்காக சிறப்பு வேன் ஒன்று தயார்செய்யப்பட்டுள்ளது. அந்த வேனில் அமர்ந்தவாறு அவர் தொகுதி முழுவதிலும் பிரசாரம் செய்கிறார்.
அவர் 17ம் தேதியே தனது பிரசாரத்தை முடித்துக் கொள்கிறார். தொகுதியில் ஒரு கிராமம் கூட விடாமல் அனைத்துப்பகுதியிலும் கருணாநிதி பிரசாரம் செய்யவுள்ளார்.
இதேபோல, திமுகவின் மற்றொரு முக்கியப் புள்ளியான சென்னை மாநகர மேயர் மு.க. ஸ்டாலினும் வைகைசேகரை ஆதரித்துப் பிரசாரம் செய்யவுள்ளார். பிப்ரவரி முதல் வாரத்தில் அவர் ஆண்டிப்பட்டி சென்று பிரசாரத்தில்ஈடுபடுகிறார்.












Click it and Unblock the Notifications