சென்னையில் ராணுவ ஆள் சேர்ப்பு தேர்வு தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்புக்கான தேர்வு இன்று (புதன்கிழமை) சென்னையில் தொடங்கியது.
சென்னை தீவுத் திடலில் இன்று தொடங்கிய இத்தேர்வுப் பணி, அடுத்த மாதம் 4ம் தேதி வரை நடைபெறும்.
இந்தத் தேர்வில் திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், தர்மபுரி உட்பட 8 மாவட்டங்களில் இருந்துஇளைஞர்கள் கலந்து கொள்ளலாம்.
உடல் தேர்வு, மருத்துவத் தேர்வு, சான்றிதழ் பரிசோதனை, எழுத்துத் தேர்வு என்று 4 கட்டங்களாக இந்த தேர்வுநடைபெற உள்ளது.
இன்று திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இன்று மட்டும்3,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்குப் பல்வேறு விதமான பயிற்சிகள்கொடுக்கப்பட்டன.
தீவுத் திடலைச் சுற்றி போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications