ராகவேந்திரா மண்டப வழக்கு: ரஜினி புதிய மனு தாக்கல்
சென்னை:
ராகவேந்திரா திருமண மண்டபம் தொடர்பான வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் முன் தனக்குத் தெரியப்படுத்தும்படிசென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் ரஜினிகாந்துக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபம் உள்ளது.
இந்த திருமண மண்டபம் அமைந்துள்ள இடம் தனக்கு சொந்தமானது என்று மனோகரன் என்பவர் ரஜினிக்குஎதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சிட்டி சிவில் நீதிமன்றம், வழக்கைத் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து மனோகரன் கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். இந்த அப்பீல் மனுவும் கடந்தமாதம்தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் ரஜினிகாந்த் உயர் நீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். மண்டபம்தொடர்பாக மனு ஏதேனும் தாக்கல் செய்யப்பட்டால், அந்த மனு மீது உத்தரவு பிறப்பிக்கும் முன், தனக்குத்தெரியப்படுத்தும்படி அந்த மனுவில் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications