5 வயது குழந்தையை கற்பழித்த 3 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருகே 5 வயது சிறுமியை கற்பழித்த 3 காமக் கொடூரன்கள் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள தோக்கவாடியை சேர்ந்தவர் நயினார். இவரது 5 வயது மகள்வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தாள்.
அப்போது அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் மகன் பெருமாள் (15), சிவக்குமார் (14), சரவணன் (19) ஆகியோர்சிறுமியை தூக்கிக் கொண்டு போய் அருகிலிருந்த முட்புதர் மறைவில் கற்பழித்து விட்டு ஓடி விட்டனர்.
காணாமல் போன மகளை நயினார் தேடிச் சென்றார். அப்போது முட்புதருக்கு மத்தியில் ரத்த காயங்களுடன் சிறுமிஉயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாள். அவளை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
இது குறித்து செங்கம் போலீசில் நயினார் கொடுத்த புகாரின்படி 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்துவருகின்றனர்.












Click it and Unblock the Notifications