ஜெயலலிதாவை ஆதரிக்கும் தமாகா எம்.எல்.ஏ.
சென்னை:
ஆண்டிப்பட்டி தொகுதி தேர்தலில் அதிமுக வேட்பாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவுக்கு ஆதரவாகச்செயல்படும் தமாகா எம்.எல்.ஏவான செ.கு. தமிழரசனிடம் விளக்கம் கேட்கப்படும் என்று அக்கட்சித் தலைவர்ஜி.கே. வாசன் இன்று (புதன்கிழமை) கூறினார்.
கடந்த ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளராக நன்னிலம் தொகுதியில்நின்று வெற்றி பெற்றவர் தமாகாவைச் சேர்ந்த தமிழரசன்.
தற்போது ஆண்டிப்பட்டியில் இடைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அதிமுகவுடனான தமாகாவின் உறவைத்துண்டித்து விட்டார் வாசன்.
ஆனாலும் ஆண்டிப்பட்டி தொகுதியில் ஜெயலலிதாவை ஆதரிப்பதாக தமிழரசன் கூறியுள்ளதாகச் செய்திகள்வந்தன.
இதுகுறித்து இன்று சென்னையில் வாசனிடம் நிருபர்கள் கேட்டபோது, இதுகுறித்து தமிழரசனிடம் விளக்கம்கேட்கப்படும் என்று கூறினார்.
முன்னதாக காந்தி நினைவு நாளையொட்டி இன்று காலை சென்னை சத்திய மூர்த்தி பவனில் உள்ள காந்தி சிலைக்குமாலை அணிவித்து வாசன் அஞ்சலி செலுத்தினார்.