சென்னை-மதுரை ரயில் அரியலூரிலும் நிற்கும்
சென்னை:
சென்னையிலிருந்து அரியலூர் வழியாக மதுரை செல்லும் 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள், இன்று (புதன்கிழமை) முதல்அரியலூரிலும் நின்று செல்லும் என்று தென்னக ரயில்வே கூறியுள்ளது.
வழக்கமாக சென்னை-மதுரை ரயில்கள் அரியலூரில் நிற்காமலேயே சென்று கொண்டிருந்தன.
இதனால் அரியலூர் மக்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகினர். இதையடுத்து அரியலூரிலும் ரயில்கள் நின்று செல்லஉத்தரவிட வேண்டும் என்று ரயில்வேத் துறைக்கு பலமுறை மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
மக்களின் வேண்டுகோளுக்கிணங்க சென்னையிலிருந்து அரியலூர் வழியாக மதுரை செல்லும் 2 ரயில்களும் இங்குநின்று செல்லும் இந்திய ரயில்வே ஏற்கனவே அறிவித்திருந்தது.
இன்று முதல் இந்த 2 ரயில்களும் அரியலூரில் நின்று செல்லும் என்று தென்னக ரயில்வேயும் அறிவித்தது.
அதன்படி இன்று பிற்பகல் சென்னையிலிருந்து கிளம்பிய பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில், மாலை அரியலூருக்குவந்து சேர்ந்தது.
அப்போது அரியலூர் ரயில் நிலையத்தில் மக்கள் பாண்டியன் எக்ஸ்பிரசை அன்புடன் வரவேற்றனர். மேலும் அங்குகூடிநின்ற மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்து இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.