"கருவறை முதல் கல்யாணம் வரை": பெண்களுக்கான புதிய 18 அம்சத் திட்டம்
புதுக்கோட்டை:
பெண்கள் கருவில் உருவாவது முதல் அவர்களது கல்யாணம் வரையிலான கால கட்டத்தில் பெண்களுக்குத்தேவையான உதவிகளை செய்யும் பொருட்டு புதிய 18 அம்சத் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வரவுள்ளதாகமாநில சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி கூறினார்.
புதுக்கோட்டையில் ஆய்வுக் கூட்டமொன்றில் கலந்து கொண்ட அவர் பின்னர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.அப்போது கூட்டத்தில் அவர் கூறியதாவது:
சமூக நலத்துறை மூலம் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகின்றன.
இந்தக் குழுக்களில் 20 பெண்கள் இடம் பெறுகிறார்கள். இவர்களுக்கு வங்கிகள் மூலம் கடனுதவிக்கு ஏற்பாடுசெய்யப்படுகிறது.
தொட்டில் குழந்தைத் திட்டம் வந்த பிறகு பெண் குழந்தை பிறந்து விட்டதே என யாரும் கவலைப்படத்தேவையில்லை. அதைக் கொல்லவும் முயல வேண்டாம். அரசிடம் வழங்கி விட்டால் அதை அரசே பராமரித்து,வளர்த்து வரும்.
ஒரு பெண் கருவில் உருவாவது முதல் அந்தப் பெண்ணின் கல்யாணம் வரையிலான காலகட்டத்தில் அந்தக்குழந்தைக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்யும் வகையில், புதிய 18 அம்சத் திட்டம் ஒன்றைதமிழக அரசு வகுத்து வருகிறது என்று வளர்மதி கூறினார்.