மதுரையில் தொடர் கொள்ளை: 54 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரையில் நடந்த தொடர் கொள்ளை காரணமாக 54 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.13 லட்சம்மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டன.

மதுரையில் கடந்த 2 மாதங்களாகவே அடுத்தடுத்து கொள்ளைச் சம்பவங்கள் நடந்து வந்தன. தங்க நகைகள் முதல்கார் வரை பல்வேறு பொருள்கள் அடுத்தடுத்து திருடு போய்க் கொண்டே இருந்தன.

கொள்ளையர்களும் போலீசார் கையில் அகப்படாமல் தப்பித்துக் கொண்டே இருந்தனர்.

இதையடுத்து 6 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 13 சப்-இன்ஸ்பெக்டர்கள் கொண்ட ஒரு தனிப் போலீஸ் படையைமதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அமைத்தார்.

இந்தப் போலீஸ் படையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில் துப்பு துலங்க ஆரம்பித்தது. இவர்கள் வீசியவலையில் 54 கொள்ளையர்கள் இதுவரை மாட்டிக் கொண்டனர்.

கைது செய்யப்பட்ட இந்த 54 கொள்ளையர்களிடமிருந்தும் சுமார் ரூ.13 லட்சம் மதிப்புள்ள பொருட்கள்மீட்கப்பட்டன.

கார், ஆட்டோ, 26 டூ வீலர்கள், தங்க நகைகள், கம்ப்யூட்டர்கள், டெலிவிஷன்கள், பட்டுப் புடவைகள்ஆகியவையும் மீட்கப்பட்ட பொருட்களில் அடக்கம்.

மீட்கப்பட்ட இந்தப் பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணியில் மதுரை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+