ஜெ.வுக்கு ஈ-மெயில் கொலை மிரட்டல் .. இன்டர்நெட் மையத்திற்கு சீல்
நாகர்கோவில்:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஈ-மெயில் மூலம் கொலை மிரட்டல் வந்ததாக எழுந்த புகாரையடுத்தநாகர்கோவிலைச் சேர்ந்த ஒரு கம்ப்யூட்டர் மையத்தில் விசாரணை நடந்து வருகிறது.
ஜெயலலிதாவுக்கு சமீபத்தில் ஈ-மெயிலில் கொலை மிரட்டல் வந்தது. இதையடுத்து அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் இந்த ஈ-மெயில் நாகர்கோவிலில் இருந்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து கன்னியாகுமரி மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் சஞ்சய் குமாருக்குத் தகவல் தெவிக்கப்பட்டது. அவரதுதலைமையில் போலீஸார் நாகர்கோவிலில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது வேப்பமூடு என்ற பகுதியில் உள்ள கம்ப்யூட்டர் மையத்தில் இருந்து தான் இந்த ஈ-மெயில் சென்றது தெரியவந்தது.ஈ-மெயில் அனுப்பப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு கம்ப்யூட்டர்கள்முடக்கி வைக்கப்பட்டுள்ளன. அந்த கம்ப்யூட்டர்மையத்துக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications