For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருச்சி அருகே கார் மோதி 7 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

திருச்சி அருகே வேனைத் தள்ளிக் கொண்டிருந்தவர்களின் மீது கார் மோதியதால் 7 பேர் உடல் நசுங்கிப்பலியாயினர்.

திருச்சியிலிருந்து 45 கி.மீ. தூரத்தில் உள்ளது வையம்பட்டி. நேற்று நள்ளிரவுக்கு ஒரு வேன் அந்தப் பகுதியில்சென்று கொண்டிருந்தது.

அம்மாப்பட்டிக்கு செல்லும் வழியில் ஒரு குறுகலான சாலையில் வேன் நின்று விட்டது. அதனால் வேனிலிருந்த 10பேர் கீழிறங்கி வேனைத் தள்ளிக் கொண்டிருந்தனர்.

அப்போது கோட்டயம் நோக்கிச் சென்று கொண்டிருந்த டாடா சுமோ கார் ஒன்று அந்தக் குறுகலான சாலையில்கண்ட்ரோல் இழந்து, வேனைத் தள்ளிக் கொண்டிருந்தவர்கள் மீது பின்புறமாக வேகமாக மோதியது.

இந்தக் கோர விபத்தில் 2 பேர் அதே இடத்தில் உடல் நசுங்கி இறந்தனர். மேலும் 5 பேர் மருத்துவமனைக்குக்கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

இவ்விபத்தில் காயமடைந்த 14 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில்4 பேரின் உடல் கவலைக்கிடமாக உள்ளது.

திருச்சி போலீசார் இந்த கோர விபத்துப் பற்றி விசாரித்து வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X