புதுவையில் கரை ஒதுங்கிய கப்பல் உடையும் அபாயம்
பாண்டிச்சேரி:
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக வீசிய பலத்த காற்று காரணமாகபாண்டிச்சேரி அருகே கரை ஒதுங்கிய கப்பல் உடையும் அபயாம் ஏற்பட்டுள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த மண்டலம் தற்போது குமரிமுனைக்கும், இலங்கைக்கும் இடையேமையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக தென் தமிழ்நாடு மற்றும் கடலோர மாவட்டப் பகுதிகளில் கனமழையும், பலத்த காற்றும் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் பாண்டிச்சேரி துறைகத்திற்கு ரசாயானப் பொருட்களை எடுத்து வரும் சிறு கப்பல் ஒன்று பலத்தசூறாவளிக் காற்றில் சிக்கி புதுவைக் கரையில் ஒதுங்கியது.
இந்தக் கப்பலை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இப்பகுதியில் தண்ணீர்மட்டம் உயர்ந்தால்தான் கப்பலை எடுக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கப்பலில் 150 டன் ரசாயானப் பொருட்கள் இருப்பதாக தெரிகிறது. கப்பல் உடைந்தால் இவை அனைத்தும் கடலில்கொட்டி, கடல் நீர் மாசுபடும் அபாயம் உள்ளது என்பதால் கப்பலை பத்திரமாக எடுக்க தீவிர முயற்சி நடந்துவருகிறது.












Click it and Unblock the Notifications