நிதி நெருக்கடிக்கு கருணாநிதிதான் காரணம்: பன்னீர் குற்றச்சாட்டு
தேனி:
தமிழகத்தின் நிதிநெருக்கடிக்கு கருணாநிதிதான் காரணம் என்று தமிழக முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆண்டிப்பட்டியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கும் பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில்கூறியதாவது:
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கும், பொருளாதார சீர்குலைவுக்கும் முந்தைய கருணாநிதி ஆட்சிதான்காரணம்.
அவர் முறையாக ஆட்சி செய்யாமல் ஜெயலலிதாவையும், அதிமுக முன்னாள் அமைச்சர்களையும் பழிவாங்குவதிலேயே தனது முழு நேரத்தையும் செலவிட்டார். அதனால்தான் தமிழகத்துக்கு இந்த நெருக்கடியானசூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கான கடன்களில் இருந்து தள்ளுபடி செய்துள்ளோம். பெண்களுக்கான பலமுன்னேற்றத் திட்டங்களை அறிவித்துள்ளோம்.
ஆண்டிப்பட்டித் தொகுதியை முன்னேற்றுவதற்காக பல நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அந்தத் திட்டங்கள் நல்லமுறையில் நடைபெற்று வருகின்றன.
தற்பொழுது ஜெயலலிதா வெற்றி பெற்று மீண்டும் முதல்வராவதே எங்களது நோக்கம் என்று பன்னீர்செல்வம்கூறினார்.












Click it and Unblock the Notifications