ஜெ. மீண்டும் முதல்வராகக் கோரி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
டெல்லி:
ஜெயலலிதா முதல்வரானது செல்லாது என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி அளிக்கப்பட்ட உச்ச நீதிமன்றதத்தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
டான்சி வழக்கில் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றிருந்த ஜெயலலிதா கடந்த சட்டசபைத் தேர்தலில்போட்டியிட முடியவில்லை. ஆனால் அந்தத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதால், ஜெயலலிதா தமிழகமுதல்வரானார்.
ஆனால் அவர் 2 ஆண்டுகள் தண்டனை பெற்றிருப்பதால் அவருடைய முதல்வர் பதவி செல்லாது என்று என்றுகடந்த ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதன்படி ஜெயலலிதா பதவி இழந்து பன்னீர்செல்வம் முதல் அமைச்சரானார். ஜெயலலிதாவுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்த அப்போதைய தமிழக ஆளுநர் பாத்திமா பீவியும் தன்னுடைய பதவியை ராஜினாமாசெய்தார்.
இதற்கிடையே இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதாவை மீண்டும் முதல்வராக அனுமதிக்கக் கோரி வழக்கறிஞர்எஸ்.எஸ். சுப்பாராவ் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அடுத்த 6 மாதங்களுக்கு ஜெயலலிதாவைத் தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடிக்க அனுமதித்தால் அவர்சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று ராவ் தன் மனுவில் கூறியிருந்தார்.
ஆனால் இந்த மனுவை ஏற்றுக் கொள்ள மறுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.பி. பரூட்சா தலைமையிலானபெஞ்ச், அந்த மனுவைத் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications