புதுவையில் 2 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரி அமைச்சரவையில் காங்கிரஸை சேர்ந்த ஏழுமலையும், தமாகாவைச் சேர்ந்த நமச்சிவாயமும்அமைச்சர்களாக இன்று (புதன்கிழமை) பதவியேற்றனர்.

பாண்டிச்சேரி அமைச்சரவையை விரிவுப் படுத்துவதாக முதல்வர் ரங்கசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார். இதுதொடர்பாக அவர் கொடுத்த கடிதத்தை பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநரான ரஜினிராய் மத்திய அரசின்அனுமதிக்கு அனுப்பி வைத்தார்.

மத்திய அரசும் இதற்கு அனுமதி அளித்து விட்டது. அதன்படி இன்று பாண்டிச்சேரியில் உள்ள ராஜ் நிவாஸில் நடந்தபதவியேற்பு விழாவில் ஏழுமலைக்கும், நமச்சிவாயத்துக்கும் ரஜனிராய் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த பதவியேற்பு விழாவில் ரங்கசாமி, அமைச்சர்கள், சபாநாயகர் ராமச்சந்திரன், தமிழக தமாகா எம்.எல்.ஏவானஎஸ்.ஆர். பாலசுப்ரமணியன் உள்பட பல தலைவர்களும் கலந்துக் கொண்டனர்.

ஏழுமலை (37) விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகிவில்லை. ஊசூடுதொகுதியில் கடந்த 2 முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

நமச்சிவாயம் முதல் முறையாக ஓல்கரட் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் ரங்கசாமிக்குஉறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+