கல்வி கட்டண உயர்வை எதிர்த்து திருச்சி கல்லூரி மாணவர்கள் போராட்டம்
திருச்சி:
பல்வேறு கல்வி கட்டண உயர்வுகளை எதிர்த்து திருச்சி கல்லூரி மாணவர்கள் இன்று (புதன்கிழமை) போராட்டம்நடத்தினர்.
நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்காக பல்வேறு கட்டணங்களையும் விலைவாசிகளையும் சமீபத்தில் உயர்த்தியதமிழக அரசு, கல்லூரிகளிலும் கட்டணங்களை உயர்த்தியது.
இந்தக் கல்வி கட்டணங்களை எதிர்த்து திருச்சி கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.
தேசியக் கல்லூரி மற்றும் ஈ.வெ.ரா. கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்கள், தங்கள் கல்லூரி வாசலிலேயேஇன்று போராட்டம் நடத்தினர்.
தங்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகை பஸ் பாசைத் திரும்பவும் வழங்க வேண்டும் என்றும் சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களைத் தாக்கியதைக் கண்டித்தும் மாணவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் ஜோதிடப் படிப்பை கல்லூரிகளில் அறிமுகப் படுத்தக்கூடாது என்றும் கோரி மாணவர்கள் கோஷங்களைஎழுப்பி, கல்லூரிக்குச் செல்வதைப் புறக்கணித்தனர்.
இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications