ஆண்டிப்பட்டியில் கலவர அபாயம்: உளவுத்துறை எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி தொகுதியில் கலவரத்தைத் தூண்டி தேர்தலை நிறுத்த சதி நடப்பதாக தமிழக அரசுக்கு உளவுத்துறைஎச்சரிக்கை தகவல் அனுப்பியுள்ளது.

ஆண்டிப்பட்டித் தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றால் தான் முதல்வராக முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால்,அவருடைய வெற்றிக்காக அதிமுக முழு மூச்சில் ஈடுபட்டுள்ளது.

ஆனால் இந்தத் தேர்தலை நிறுத்துவதற்கான அனைத்து வழிகளிலும் திமுக உட்பட மற்றக் கட்சிகள் ஈடுபட்டுவருகின்றன. தேர்தல் ஆணையம் முதல் ஜனாதிபதி வரை தேர்தலை நிறுத்துமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கைவிடுத்தும், அவர்கள் முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இதனால் இறுதிக்கட்ட முயற்சியாக சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படுத்தும் முயற்சிகளில் எதிர்க்கட்சிகள் ஈடுபடஇருப்பதாக ஒரு தகவல் உளவுத்துறை போலீசாருக்கு கிடைத்தது. கலவரத்தைத் தூண்டி விட்டு தேர்தலை நிறுத்தஎதிர்க்கட்சிகள் சதி செய்கின்றன என்று தமிழக அரசுக்கு உளவுத்துறை தகவல் அனுப்பியுள்ளது.

நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து உடனடி நடவடிக்கை எடுப்பதற்காக மேலும் ஒரு சிறப்பு உளவுப்பிரிவுஆண்டிப்பட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பிரச்சனை ஏற்படும் இடங்கள், சமூக விரோத கும்பல், பதட்டம் ஏற்படும் இடங்கள் போன்றவற்றை இந்தஉளவுத்துறைப் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்காக கூடுதல் பாதுகாப்பை வழங்கவும் போலீசாருக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+